
கல்லூரிக் கருவறைக்குள்
நாம் ஒன்றாகவே சூழ்கொண்டோம்.
அந்த நினைவுகள் பசுமையானவை.
நித்தியம் என்பது இவ்வாழ்வில்
ஏதுமில்லை என்றாகிவிட்ட போது
அந்த வசந்த காலமும்
ஒரு கனவாகவே ஆகிவிட்டது.
விதி உனக்கென வரைந்த
இருபத்து நான்கு அகவைக்குள்
அமைதியான தென்றலாய்
நீ அடங்கிவிட்டாய்.
உன் இலட்சியக் கனவுக்காய்
நோய் கொண்டதையும் மறந்து
படித்தாய் -
பட்டம் பெறும் நாளில் நாம்
பட்டாம்பூச்சியாய் பறக்க
நீ மட்டும் சிறகிழந்து
ஊன்றுகோலோடு வந்தாய்.
எத்தனை கனவுகளை நீ
சுமந்திருப்பாய் என்பது
எனக்குத் தெரியாது.
சுவனத்து வீதியில் உனக்கென
ஒரு இல்லம்...
குளிர்ந்த ஆறு...
ஹூருல் ஈன்கள்...
பழங்கள் நிறைந்த மரச் சோலை...
இந்த இன்பங்களில் நீ இழந்தவை
நிச்சயமாய் உனக்கு மறந்து போகும்.
நாம் மரணத்தினால் பிரிபவர்களல்ல.
மஹ்சரின் நிழலில்
சந்திப்போம் - இன்சா அல்லாஹ்.
(ஏழு வருடங்கள் எம்மோடு ஒன்றாகப் படித்து நீரிழிவு நோய்க்கு மத்தியிலும் தனது நளீமிய்யா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக பட்டப்படிப்பு என்பவற்றை பூர்த்தி செய்து 2008 மே மாதம் வபாத்தான சம்மாந்துறையைச் சேர்ந்த மர்ஹூம் தாஹிரின் நினைவாக...)
salam
பதிலளிநீக்குpls add
www.jamiyya.org
slisminfo.blogspot.com
to ur link list