-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

25 ஜன., 2010

எனது வாக்கு...

(கவிதை - இஸ்மத்)



யுத்தத்தில் வென்று நீயெனக்கு அமைதி
தந்தாய் - அதற்காய் உனக்கொரு புள்ளடி.

வெற்றி தந்த வேந்தன் நீயே
வேதனைகளும் தந்தாய்.

கொள்ளை வரிப் பணத்தில்
மாடிகள் நீ கட்டி மகிழ்ச்சியாய்
வாழுகின்றாய் - கொசுக் கடித்து
மரணிக்கிறது என் குழந்தை.

தட்டிக் கேட்க நீ யாரையும்
விட்டு வைக்க வில்லை..
உன் புராணம் பாட மட்டுமே
நீ பேனைகளுக்கு மைக் கொடுத்தாய்.
எல்லா வாய்களுக்கும் பூட்டிட்டு
நீ பாடும் ஓலத்தை மட்டுமே
கேட்க வேண்டுமென்கிறாய்...
உன் ஆட்சிக்கு இல்லை வீழ்ச்சி
என்று ஆணவம் செய்கிறாய்.

எல்லாவற்றுக்கும் சேர்த்து
இதோ உனக்கெதிராய்
ஒன்று...இரண்டு..மூன்று
என்று என் கரம் புள்ளடியிடுகின்றது.
2010.01.26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக