
நீயென்னை நெருங்கும் போதெல்லாம்
தள்ளியே நான் நடந்தேன்.
என்னைப் பற்றிய விம்பம்
துரோகி என்றே உன்
கண்ணில் விழுந்தது.
அவன் என்ன செய்துவிடுவானோ
என்ற பயம் எனக்குள்ளும்
உனக்குள்ளும் எப்போதுமிருந்தது.
சின்னச் சிறு கூட்டுக்குள்ளேயே
துருவங்களானோம் நாம் மூவரும்.
பக்கத்தில் சந்திக்கின்ற போதும்
நாம் புன்னகைக்க மறந்தோம்.
எனக்கும் உனக்கும்
தெரிந்த பாiஷ
அவனுக்குப் புரியவில்லை – நாம்
மனம்விட்டு பேசக் கொண்டதில்லை.
எனக்கு உன் பெயரோ
அவனுக்கு என் பெயரோ
உனக்கு நம் பெயரோ தெரியாது.
நாம் அறிந்து வைத்திருந்ததெல்லாம்
சிங்களவன்...
தமிழன்...
சோனகன் - என்பதை மட்டுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக