2) வெற்றியாளன் பிறருக்கும் உதவிக் கொண்டிருப்பான் - தோல்வியாளன் பிறரின் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பான்.
3) வெற்றியாளன் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வைக் கொண்டிருப்பான்- தோல்வியாளனோ ஒவ்வொரு தீர்விலும் ஒரு பிரச்சினையைக் காண்பான்.
4) வெற்றியாளன் நிறைவேறக்கூடிய கனவுகளைக் காண்பான் - தோல்வியாளனோ பிரமையில் மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பான்.
5) வெற்றியாளன் பிறர் தன்னோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றானோ அதே போல் அவர்களோடு நடந்து கொள்வான் - தோல்வியாளனோ பிறர் தன்னை ஏமாற்றி விடுவார்கள் என்று நினைத்து அவர்களை ஏமாற்றுவதற்கு முந்திக் கொள்வான்.
6) வெற்றியாளனது தனது வேலையில் எதிர்ப்பார்ப்புடன் செயற்படுவான் - தோல்வியாளனோ தன் வேலையை சலிப்புடன் முன்னெடுப்பான்.
7) வெற்றியாளர்கள் நிகழ்வுகளை தோற்றுவிப்பார்கள் - தோல்வியாளர்கள் நிகழ்வுகளால் இயங்கிக் கொண்டிருப்பர்.
8) வெற்றியாளனின் கூற்று : '' தீர்வு கடினமானது - என்றாலும் முடியுமானது''
தோல்வியாளின் கூற்று : '' தீர்வு முடியுமானது - என்றாலும் கடினமானது'' என்பதாக இருக்கும் -

(அம்ரு காலிதின் கட்டுரை ஒன்றில் வாசித்தவை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக