-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

18 செப்., 2010

போர் முடிவடைந்துவிட்டது...ஆனால் என்னால் இனி வாழ முடியுமா?



அமேரிக்க-ஆப்கான் போர் குறித்த BROTHERS எனும் ஆங்கிலத் திரைப்படமொன்றை அண்மையில் பார்த்தேன். TOMMY, SAM எனும் இரு சகோதரர்களின் கதையை மையமாக்கொண்டது இத்திரைப்படம். கதையின் ஆரம்பத்தில் ஏற்கனவே செய்த ஒரு குற்றத்திற்காக TOMMY சிறையில் இருந்து விடுதலையாகின்றான். அவனது சகோதரன் SAM ஓர் அமேரிக்கப் படை வீரன். தன் இளைய மகனையிட்டு தந்தை பெருமைப்படுகின்றார். மூத்த மகன் TOMMY தன் மானத்தை வாங்குவதற்கென்றே பிறந்தவன் என்று கூறி அவனோடு அடிக்கடி சண்டையிடுகின்றார்.


SAM ஆப்கான் சென்று திரும்பும் நேரம். நாளை மனைவி மற்றும் தன் இரு செல்வங்களான மகள்மாரைக் காணப்போகும் சந்தோசத்தில் போர் நடைபெற்ற இடத்திலிருந்து அமேரிக்கப் படைத் தளத்திற்கு திரும்பும் வழியில் ஆப்கான் போராளிகள் ஹெலிகொப்டரைத் தாக்கிவிடுகின்றனர்.




கணவன் திரும்பும் சந்தோசத்திலிருந்த மனைவிக்கு அவனது மரணச் செய்திதான் வந்து சேர்கின்றது.
பிறகு TOMMY தன் சகோதரனின் குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்குகின்றான். தன் சகோதரனின் மகள்மாருக்கு தந்தையில்லாத குறையை நிவர்த்திக்க முயற்சிக்கின்றான்.

என்றாலும் SAM இறக்கவில்லை. அந்த ஹெலிகொப்டர் தாக்குதலில் அவனும் இன்னொரு வீரனும் தப்பிக்க அவர்களை ஆப்கான் போராளிகள் கைது செய்கின்றனர். பிறகு இருவரையும் ஆப்கான் போராளிகள் துன்புறுத்துவதாகக் காட்டப்படுகின்றது. இங்கு அவர்களை துன்புறுத்தும் ஆப்கான் போராளிகளின் செயல், ஈராக்கில் அமேரிக்கப் படை வீரர்கள் செய்த அட்டூழியங்களில் ஒரு வீதமாவது இல்லை என்றே குறிப்பிட வேண்டும்.

கடைசியில் ஆப்கான் போராளிகள் SAM க் கொண்டு சக அமேரிக்க வீரனை கொன்றுவிடுகின்றனர். அமேரிக்க போர் ரகசியங்களைக் கூறா விட்டால் உனக்கும் இதே கதிதான் என்று கூறி அவனைத் துன்புறுத்தும் கட்டத்தில் அமேரிக்கப் படையினர் வந்து காப்பாற்றிவிடுகின்றனர். SAM அமேரிக்கா திரும்புகின்றான். மனைவி, குழந்தைகள் சந்தோசப்படுகின்றனர்.

தன் மனைவி, பிள்ளைகள் தன் சகோதரனுடன் முன்பை விட நெருக்கமாக இருப்பதை SAM ஆல் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன் மனைவி மீது சந்தேகப்படுகின்றான். அவனால் சந்தேசமாக இருக்க முடியவில்லை. மனைவியோடு தினமும் சண்டை போடத் தொடங்குகின்றான். பிள்ளைகளும் தந்தையை வெறுக்கத் தொடங்குகின்றனர்.




மனைவியோடு சண்டையிட்ட ஒரு நாளில் பொலிசார் அவனது வீட்டைச் சுற்றி வளைத்து கைது செய்கின்றனர். ஆப்கானில் சக அமேரிக்கப் படை வீரனைக் கொன்ற குற்றத்திற்காக SAM சிறையிலடைக்கப்படுகின்றான்.

சில வருடங்களின் பின்...

SAM சிறையில் இருந்து விடுதலையாகின்றான். அப்போது அமேரிக்க-ஆப்கான் போர் முடிவடைந்திருக்கிறது. சிறையிலிருந்து வெளியே வரும் SAM சொல்லும் பின்வரும் வசனத்தோடு திரைப்படம் முடிவடைகின்றது.

I HAVE SEEN END OF THE WAR - THE QUESTION IS CAN I LIVE AGAIN??



இலங்கைப் போரில் தெற்கு சிங்கள சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் கலாசார மற்றும் குடும்ப ரீதியான சீரழிவுகளை காட்சிப்படுத்தும் வகையில் இப்படியான திரைப்படமொன்று சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு வெளிவந்தது ஞாபகம். ''அலு யட கினி' என்று நினைக்கிறேன்.

உண்மையில் போரின் வலியென்பது வெற்றி வெற்றவன் - தோல்வியடைந்தவன் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமானது என்பதில் சந்தேகமில்லை. போரினால் சந்தோசப்படுபவர்கள் ஏ.சிக் குளிரில் இருந்து கொண்டு அறிக்கை விடும் ஆட்சியாளர்கள் மட்டுமே. மற்றைய அனைவருக்கும் போர் என்பது வலியே.

1 கருத்து: